காதல் கவிதை : உன் பார்வையின் நோக்கம் என்ன?

கண்ணோரம் சாய்ந்து பேசும் கன்னி மலரே நீயே என் காதல் இளவரசி மொட்டாய் நீ இருக்கும் போதே என் நெஞ்சை இனிப்பால் நிரப்புகிறாய் நீ மலராய் மலர்ந்து விட்டால் எப்படி இனிப்பாய்.

கண்ணோடும் காதல் வழிய கவிக்குயிலும் ராகம் துணிக்க நெஞ்சோட இருந்த பாரம் மென்மையாக கரையை கடக்க வெண்ணிற நிலவாய் நீ என்னை சூழ மேற்கே சிவந்து நிற்கும் வானம் போல என் மனசும் சிவந்து கிடக்குதடி

ஓடை ஓர காத்தும் காதோரம் கவிப்பாட ஒத்தையில நின்ன மயில் கண்ணு வைத்து பார்க்குதடி நாம் ஓடி ஆடும் அழகு நிகழ்வ அசையாது மயிலும் பார்க்குதடி

கண்ணே நீ மாஞ்சோலை கவிக்குயிலே நீ தேன்சோலை பெண்ணே நீ பூஞ்சோலை பொக்கிஷமே நீ பொண் சோலை தோகை மயில் விரித்து ஆடுமடி காணகத்தில் மூடு துணி நீ நீக்கி ஆடுறியே என் கண்ணகத்தில்

மஞ்சள் பூசும் மரிக்கொழுந்தே நீ நடந்தாள் பூவும் பூக்கும் பூஞ்சோலையும் சிரிக்கும்

நீ சிரிக்கும் போது மத்தாப்பு நீ சிந்திக்கும் போது தித்திப்பு பால் ஆடையில் மிதக்கும் வெண்ணையடி நீ மேல் ஆடை இல்லாமல் தவிக்கும் மேகமடி நீ

அங்குஜம் உடையவளே அழகு நீரில் பூப்பவளே சங்குஜம் தீர்க்க சமிக்கை கொடுப்பவளே

நீரோடையில் நீந்தலாமா நிலவில் இருவரும் நீச்சல் பழகலாமா பார்வையில் பதம் பார்க்கும் வெடித்து நிற்கும் பஞ்சு பூவே உன் பார்வையின் நோக்கம் தான் என்ன?

No comments:

Powered by Blogger.