
Introduction: இந்த பதிவில் அழகிய தமிழ் காதல் ஹைக்கூ கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்
Admin_Siva
July 15, 2024
கவிதை: பொண்ணி
காலை வெயில் சேலை கட்டி பொத்தி வைத்த பிம்பம் பொண்ணி முகப்பொலிவில் பிரதிபலிக்குதே நித்தம்.
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: ரோஜா
தேனீக்களே ஏக்கம் கொண்டு பொத்தி வைத்த பூவே உன் தோரனை தான் இந்திரன் இனிப்புக்கு விருந்தோ.
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: பனி
மூடுபனி பந்தல் இட்டு புல்லாங்குழல் நீட்டி வைத்து அதிகாலை ஊதுதடி குயிலே ஈரக்காற்று நெஞ்சோரம் பாடுதடி மயிலே
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: யானை
ஆனைமலை ஏத்தும் மெல்லாம் உந்தன் மேலே சில அதிசயங்கள் கூறுதடி காற்றுப்போல சோலைமலை சாரல் யாவும் சினுங்கி நிக்கும் குட்டி யானை மெத்தை கேட்டு பதுங்கி நிக்கும்.
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: முனுகள்
சந்தார பூ சடங்கு ஆயி சந்தனமும் ஜவ்வாது பூசி வந்தால் நறுமணமும் கமழுமடி நாலு சுவத்துக்குள்ள முனுகள் சத்தம் கேட்கும்மடி காதுக்குள்ள காசிக்கு போறதுக்கு வேலையில்லை
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: ஊதல் வேட்கை
நீண்டு நிற்குதடி மூங்கில் காடு முன்னே பின்னே அதை உடைச்சி ஓட்டப்போடு ஓட்டையாவும் மெல்ல பொத்தி ஊதி பாரு உன் வேட்கை யாவும் தீரும் மடி பாட்டுப்பாடு
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: விரல்
ஐந்து விரல் அம்மாயி அழகப்பாரு அவள் கழனியில பட்ட கதை நீயும் கேளு நெட்டையான விரல்கள் யாவும் கரைந்துடுச்சி அது மண்ணுக்கு உணவாக மாறிடிச்சி.
- சோழநாட்டுகவிஞர்
No comments: