
Introduction: இந்த பதிவில் அழகிய வாழ்வியல் காதல் ஹைக்கூ கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்
Admin_Siva
July 15, 2024
கவிதை: உரம்
மலராத பூவும் தோட்டத்தின் மண்ணுக்கே உரம் ஆகும்.
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: துரோகம்
இன்று நீ செய்த காரியத்தை நாளை நீ உணர்வாய்.
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: நடிப்பு
இல்லாதவன் வயிற்றில் அடிக்காதே இருப்பவனிடம் அன்பாய் நடிக்காதே
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: விதைப்பு
மரணத்தின் உச்சியில் ஒருவன் நிற்கும் போதும் நீ அவனுக்கு துரோகத்தை விதைக்காதே. .
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: அடுப்பங்கரை
பெண்களின் பல துயரங்களை தாங்கி நிற்கும் தாய் வீடு.
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: பிஞ்சு
மாமரத்து பூவுலகில் மிதக்குதடி தங்கம் _அதை ஆடி காத்தும் அப்போ அப்போ வந்து நின்னு கொஞ்சும் .. வெட்கத்துல சேலை கட்டி ஆடுதடி காம்பு வேதனையில் வாடுதடி சின்ன மா பிஞ்சு.
- சோழநாட்டுகவிஞர்
கவிதை: வாழ்வில்
நித்தமும் ஓடி ஓடி உழைத்தாலும் நிம்மதி வாழ்வில் இல்லை ஏன் பிரம்மா
- சோழநாட்டுகவிஞர்
No comments: